தன்னை இந்த சமூகம் வாழ விடவில்லை என்னை மிகவும் மட்டம் தட்டி நடத்துகின்றனர் என்று நேர்காணல் ஒன்றில் பேசிய மீராமிதுன் கதறியுள்ளார்.
மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் படம் மூலம் அறிமுகமாகி பின்னர் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்கு பின்பு பிக்பாஸில் கலந்துகொண்டு தமிழகமெங்கும் நெகட்டிவ் பப்ளிசிட்டியை இவர் பெற்றார். பிக்பாஸில் இவர் பல சர்ச்சையான வேலைகளை செய்து அதன் மூலம் மக்களிடம் திட்டு வாங்கினார். அதிலிருந்து வெளியே வந்த பின்பும் அதே வேலையைத்தான் இவர் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்.

பெரிய நடிகர்களை வசைபாடுவது, அரசியல் என பல வேண்டாத வேலைகளை இவர் செய்து அந்த நேரத்தில் பட்டியலின மக்கள் பற்றி அவதூறாக பேசி சிறைக்கும் சென்றார். தற்போது அதிலிருந்து வெளியே வந்து ஒரு தனியார் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் பேட்டி அளித்த மீராமிதுன் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் தற்கொலை வரை சென்று இருக்கிறார் என கூறியிருக்கிறார். மேலும் இந்த சமூகம், இந்த சமுதாயம் என்னை இப்படி மாற்றி இருக்கிறது என்னை தற்கொலை முயற்சிக்கு தள்ள இந்த சமூகம்தான் காரணம் என கூறியுள்ளார்.
தற்போது நீதிமன்றத்தில் கையெழுத்திட கூட என்னிடம் காசு இல்லை, வக்கீலுக்கு பணம் செலுத்த கூட போதிய பணம் என்னிடம் இல்லை என கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர் நான் இந்தியாவிற்காகவும் தமிழ்நாட்டிஇற்காகவும் ஏகப்பட்ட சாதனைகளை செய்து இருக்கிறேன். ஆனால் எனக்கு இப்படி ஒரு நிலைமையா நான் இறந்த பின்பு என்னோட சாதனைகள் எல்லாம் வெளியே வரும்போது என்னை கண்டு நீங்கள் பெருமைப்படுவீர்கள் என இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
