தமிழணங்கு தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்ட பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை டுவீட் வைரலாகி வருகிறது.
பாஜக தமிழக தலைவர் திரு அண்ணாமலை பதிவிட்ட தமிழணங்கு என்ற படத்தில் “ஸ ” என்ற வடமொழி எழுத்து இருப்பதால் அதை குறிப்பிட்டு அதில் அவர் கூறியதாவது. “தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்”என்று குறிப்பிட்டார்.

அவரது பதிலுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அண்ணாமலை அம்பலப்படுத்திக் கொண்டே பதிவிட்டால் அதில் அவர் கூறியது :- தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள “ஸ” என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். “ஸ”வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும்.
அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!
“தமிழ் தமிழ்” என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது!” என்று கூறினார்.

பாஜக வின் ஆதரவாளர்கள் நெத்தியடி அடித்து இருக்கிறார் அண்ணாமலை என கமெண்ட் செய்து வருகின்றனர்.