சசிகலாவை சந்தித்து சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட தனது சகோதரர் ராஜாவை ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுக கட்சியில் இருந்து நீக்கினார்.
நேற்று திருச்செந்தூர் வந்த சசிகலாவை சந்திக்க ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரரும் மற்றும் தேனி மாவட்ட அதிமுக பிரமுகருமான ஒ ராஜா அவர்கள் சென்று இருந்தார். அப்போது அந்தக் கூட்டத்தில் யார் யார் அதிமுகவினர் சசிகலாவை சந்திக்க சென்றார்களோ, அவர்களை எல்லாம் கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
அதில் அதிர்ச்சி அடைந்த ராஜா, “தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அவர்கள் 2 பேரும் கட்சியை என்ன செய்தார்கள் ? எந்தவிதமான முன்னேற்றமும் செய்யவில்லை, கட்சி இப்போது டம்மியாக இருக்கிறது தொண்டர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். சசிகலாவால் மட்டும்தான் அதிமுகவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்” என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர் “நான் என்ன ஸ்டாலினையா சந்தித்தேன் ? சசிகலாவை தானே சந்தித்தேன். என்னை ஏன் கட்சியிலிருந்து தூக்கினார்கள். என்னை கட்சியிலிருந்து தூக்க இவர்கள் யார் என்னுடைய பொதுச்செயலாளர் எப்போதுமே சசிகலாதான்” என்றார்.