அமெரிக்காவில் புற்று நோயை குணப்படுத்துவதற்கான மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
நம் உலகம் முழுவதும் குணப்படுத்தவே முடியாத ஒரு நோய் என்றால் புற்றுநோய் எனலாம். இந்த நோய்க்கு இன்று வரை சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த புற்றுநோய் குடல் புற்று, கல்லீரல் புற்று என எங்கு வேண்டுமானாலும் வரும் அபாயம் உள்ளது. தற்போது வரை புற்றுநோய் ஏற்பட்டால் அதை அழிக்க கீமோதெரபி சிகிச்சை தான் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் ஒரு மருத்துவ குழுவினர் புற்றுநோய்க்கான ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். மன்ஹாட்டனில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில் புற்றுநோயை முற்றிலும் குணமாக்கக் கூடிய அளவிற்கு dostarlimab என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தை 18 குடல் புற்று நோயாளிகளிடம் சோதனை செய்து பார்த்ததில் எந்தவித பக்கவிளைவும் இன்றி 100 சதவீதம் குணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மருந்தை மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் சோதித்து அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்த மருந்தை உலகம் முழுக்க புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு செலுத்தி குணப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
