விதிகளை மீறி விளம்பரப் பலகைகள் பேனர்கள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாக துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி விளம்பர பலகைகள் பேனர்கள் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவக்கூடாது என்றும் உரிமக்காலம் முடிந்த பின்பும் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள் பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விதிகளை மீறி செயல்படும் நிறுவனம் மற்றும் தனிநபர் உள்ளிட்டோர் மீது மூன்று வருட சிறை தண்டனையோ அல்லது இருபத்தைந்தாயிரம் அபராதமோ விதிக்கப்படும் எனவும் நகராட்சி நிர்வாக துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
