உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் கொடுக்க வந்த சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு செய்த போலீசார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமி நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அவரை கடத்திச் சென்று போபாலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவரை நான்கு நாள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ஏப்ரல் 26-ஆம் தேதி போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அவரை இறக்கி விட்டு சென்றுவிட்டனர். மறுநாள் பெண் உறவினருடன் போலீசில் இது குறித்து புகார் அளிக்க வந்தார் அந்த சிறுமி.
அப்போது புகார் அளிக்க வந்த அந்த சிறுமியிடமே அங்கிருந்த போலீசார் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து அந்த இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது பெண் உறவினர்கள் உட்பட அந்த போலீஸ் ஸ்டேஷனில் இருந்த 6 பேரை சஸ்பெண்ட் செய்து இருக்கின்றனர். மேலும் அந்த இன்ஸ்பெக்டர் மீது கிரிமினல் வழக்கும் போடப்பட்டுள்ளது.

மேலும் குற்றம்சாட்டப்பட்ட அவர் தலைமறைவாக இருப்பதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த வழக்கை டிஐஜி அளவிலான போலீசார் விசாரித்து 24 மணி நேரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி வலியுறுத்தியுள்ளனர்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சிறுமியிடமே பாலியல் வன்புணர்வு நடைபெற்ற இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
