செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியில் டிக் டாக் செய்து கொண்டிருக்கும்போது விரைவு ரயில் மோதி பரிதாபமாக மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோயில் செட்டிபுண்ணியம் பாரதி தெருவை சேர்ந்தவர் அசோகன்,மோகன் மற்றும் பிரகாஷ் அவர்கள் 3 பேரும் கூட்டாளிகள். அவர்கள் ஒன்றாக சேர்ந்து டிக் டாக் ரீலிஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுவது என இருந்தனர். எனவே அப்படி ஒரு சமயம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதற்காக தாம்பரம் செங்கல்பட்டு இடையே மூன்றாவதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் இருப்புப் பாதையில் அமர்ந்து வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அந்த ரயில் பாதையில் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தபோது அந்த நேரத்தில் இந்த மூன்று பெரும் செல்போனில் வீடியோக்களை பதிவு செய்து கொண்டிருந்தனர். அபோது வந்த விழுப்புரம் விரைவு ரயில் மோதி இந்த மூன்று பேர் எதிர்பாராதவிதமாக விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இந்த தகவலை அறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர் அந்த சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்பி மோகத்தாலும் மற்றும் டிக் டாக் வீடியோ ரிலீஸ் மோகத்தாலும் உயிர்கள் மடிவது தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது. எனவே இளைஞர்கள் இனிமேல் இப்படியான செயல்களை செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்த சம்பவம் உணர்த்துகிறது.
