நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இதற்கு மொத்தம் 15 காலியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் வருகிற ஒன்பதாம் தேதிக்குள் விண்ணப்பித்தாக வேண்டும். இந்த விண்ணப்பத்திற்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அதிகாரபூர்வ இணையதளம் இதுதான் http:/districts.ecourts.gov.in/nagapattinam
“எட்டு வயதில் நான் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன்” Open Talk விட்ட பிக் பாஸ் பிரபலம்

பதிவிறக்கம் செய்த அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு அதற்கு தேவையான சான்றிதழ்களில் நகல்களை சுய சான்றோப்பம் செய்து அதனுடன் ஒரு சமீபத்திய புகைப்படத்துடன் கொடுக்கப்பட்ட அந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி என்னவென்றால்
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
நாகப்பட்டினம்
இதனை விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அவர்களின் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு தொழில்நுட்ப தேர்வான தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். மேலும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 20 ஆயிரத்து 600 முதல் 65 ஆயிரத்து 500 வரை சம்பளம் வழங்கப்படும்.
