“சந்தேகம் ஏதும் இல்லாததால் ஜெ-வின் வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்தவில்லை” – ஆறுமுகசாமி ஆணையம் அறிவிப்பு

சந்தேகம் ஏதும் இல்லாததால் ஜெயலலிதாவின் வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்தவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் தற்போது அறிவிப்பு கொடுத்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடந்த விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் 600 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை இன்று முதலமைச்சரிடம் தற்போது சமர்ப்பித்து இருக்கிறது. ஜெயலலிதா மரணத்தில் குளறுபடிகள் இருக்கிறது என்று எழுந்த புகாரின் பேரில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.

கூகிள் பே, போன் பே-வில் பண பரிவர்த்தனை செய்யும்போது கட்டணம் வசூலிக்கப்படுமா ? – நிர்மலா சீதாராம் கூறிய பதில் என்ன ?

தற்போது ஐந்தாண்டுகள் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று அதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பன்னீர்செல்வம் உட்பட 100க்கும் மேற்பட்டோரிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த விதமான தவறும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனையும் அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.

தற்போது இந்த அறிக்கையை எல்லாம் 600 பக்கங்கள் அடங்கிய விசாரணை அறிக்கையாக முதலமைச்சரிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்த விதத்தில் சந்தேகத்தன்மை எதுவுமே கிடையாது. அதனால் அவரது வீட்டிற்கு நாங்கள் சென்று ஆய்வு செய்யவில்லை என ஆறுமுகசாமி ஆணைய தலைவர் கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வெழுதும் அரசு மாணவர்கள் எண்ணிக்கை குறைவு | காரணம் என்ன ?

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் குறைவாகவே

“பாஜகவை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது” – உதயநிதி

இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேற சொல்வது தான் பாஜகவின் பாசிசம் எனக் கூறிய அமைச்சர் உதயநிதி

தமிழ் சினிமாவை காப்பாற்றியது விக்ரமா ? ஜெயிலரா ? யார் பெருசுனு அடிச்சு காட்டு ?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின்

Latest News

Big Stories