மலையாளத்தில் பிரபல நடிகையான மம்தா மோகன் தாஸ் மாலத்தீவில் எடுக்கப்பட்ட தனது பிகினி புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றி ரசிகர்களை குஷிப் படுத்தி உள்ளார்.


மம்தா மோகன் தாஸ் மலையாளத்தில் பின்னணி பாடகியாகவும் தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் பன்முக திறமை கொண்டவர். சினிமாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு தயாரிப்புகளிலும் மலையாள படங்களிலும் பணிபுரிந்துள்ளார். இவர் விஷாலுடன் சிவப்பதிகாரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன்முதலில் அறிமுகமானார்.
பின்னர் குரு என் ஆளு, தடையறத்தாக்க, குசேலன், உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இறுதியாக இவர் விஷால் மற்றும் ஆர்யாவுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்த ிருந்தார். இவரின் கையில் தற்போது ஊமை விழிகள் என்ற ஒரு படம் தயாரிப்பில் உள்ளது. மேலும் இவர் 2006 இல் தெலுங்கில் சிறந்த பெண்மணி பாடகி, மற்றும் 2010ல் மலையாளத்தில் சிறந்த நடிகை, மற்றும் கேரளம் மாநில திரைப்பட பல பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றவர்.


அதன் பிறகு மம்தா பெகரினை சேர்ந்த தொழிலதிபரான பிரஜித் பத்மநாபனுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு தலச்சேரியில் திருமணம் நடந்தது. இதை அடுத்து இவர்கள் ஒரு வருட திருமண வாழ்க்கை கசப்பாக இருந்தது. கடந்த 12 டிசம்பர் 2012 அன்று இந்த தம்பதியினர் விவாகரத்தும் பெற்று பிரிந்தனர்.


தற்போது சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் மம்தா சில ஹாட்டான புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து அவர்களை சூடு ஏற்றி வருகிறார். மேலும் தற்போது விடுமுறையை கொண்டாட அவர் மாலத்தீவுக்கும் சென்றுள்ளார். அங்கு கையில் சரக்குடன் பிக்கினி உடை அணிந்து கடலில் நின்றவாறு போஸ் கொடுத்து அந்த கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியேற்றி ரசிகர்களையும் குஷி படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் வைராலாகி வருகிறது.
