திராவிட கட்சிகள் மது விற்பனையை பெருக்கி விட்டனர் மோடி ஆட்சியில் ஊழல் குறைந்திருக்கிறது என ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் :-
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் பேசுகையில் பிரதமர் மோடி எப்போது ஆட்சிக்கு வந்தாரோ அப்போதிலிருந்து ஊழல் குறைந்திருக்கிறது, பல்வேறு சட்ட சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில இடங்களில் மொழி பிரச்சினை ஏற்பட்டுள்ளது அதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இந்தியாவில் எந்த மொழியும் தேசிய மொழி அல்ல நம் நாட்டில் தமிழ் இந்தி என அலுவல் மொழிகள் தான் உள்ளது.
அதனால் இந்த மொழி பெரியது அந்த மொழி சிறியது என பாகுபாடு காட்டக் கூடாது. தற்போது தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் போதைக்கு அடிமையாவதை கடந்த பத்தாண்டில் மிகவும் அதிகரித்துள்ளது. மதுவுக்கு எதிராக 40 ஆண்டுகாலமாக பாமக நிறுவனர் ராமதாஸ் எவ்வளவோ போராட்டங்களை செய்திருக்கிறார் திமுக அதிமுக என மாறி மாறி ஆட்சிக்கு வந்து இந்த மது விற்பனையை பெருக்கி உள்ளனர்.
18 மாதம் பச்சிலம் குழந்தை உட்பட 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய் | காரணம் இது தானாம்

முதல்வர் இதுகுறித்து உடனே சிந்தித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப் பட்டது போல அடுத்த 4 ஆண்டுகளில் இந்த மதுவை ஒழிக்க வேண்டும் மேலும் ஆன்லைன் போராட்டங்களால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து வருகின்றனர் என டிஜிபி காணொளி காட்சியில் பேசியிருக்கிறார்.
ஒரு ஆண்டுக்கு சுமார் 50 பேருக்கும் மேல் தற்கொலை செய்கின்றனர் இதை தடுப்பதற்காக பேரவையில் உடனே சட்டத்திருத்த மசோதா முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவேண்டும். 2016 பேரவைத் தேர்தலுக்கு முன்பே மாற்றம் முன்னேற்றம் அன்புமணி எனது திட்டத்தை நான் வெளியிட்டேன். அதை பலரும் காப்பியடித்து தான் திமுக அதிமுக போன்ற கட்சிகள் வெளியிட்டது. தற்போது இந்த பாமக 2.0 எனப்படும் திட்டத்தை முன்கூட்டியே சொல்ல மாட்டோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தான் எங்கள் இலக்கு என கூறினார்.
