மதுரை ஆதீனத்தை மிரட்டுவது அமைச்சருக்கு நல்லதில்லை என்று பொதுக்கூட்டத்தில் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார் அண்ணாமலை.
திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் பாஜக சார்பில் மத்திய அரசின் எட்டாண்டு கால சாதனையை பற்றி பேச பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது அதில் கலந்து கொண்ட மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் காட்சியைப் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருந்தார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மீடியாவை சேர்ந்தவரை தாக்கிய அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா

அப்போது ஏழை எளிய மக்களுக்காக பாஜக எப்படி பாடு பட்டு இருக்கிறது என்று கூறிக்கொண்டிருக்கும்போது. திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபுவை பற்றி சரமாரியாக தாக்கி பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் சேகர் பாபு காவி காஸ்டியூமில் வலம் வருகிறார். மேலும் மதுரை ஆதீனத்தை அவர் மிரட்டுகிறார்.
மதுரை ஆதீனத்தை மிரட்டினால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் இதேபோல சிதம்பரம் கோயில் விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு தலையிடுகிறார். இதனை தொடர்ந்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரும் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் போட்டி போட்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். நியூட்ரிஷன் திட்டத்தில் கமிஷன் நடைபெற்றுள்ளது.தமிழகத்தில் ஊழல் செய்யும் ஒரு கட்சியாக தற்போது திமுக இருந்து வருகிறது என அண்ணாமலை காட்டமாக பேசியுள்ளார்.
