பிரபல நடிகர் அர்ஜுன் அவர்களின் தாயார் காலமானார். அவருக்காக திரைதுறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகில் பிரபல நடிகர் அர்ஜுன் தனது தாயார் இறந்த சோகத்தில் மூழ்கியுள்ளார். இவர் 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் பயணித்தவர். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆக்சன் படங்கள் என்றாலே அர்ஜுன்தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு ஆக்சன் படங்களில் புகுந்து விளையாடுபவர் அர்ஜுன். அதனால்தான் இவருக்கு ஆக்சன் கிங் அர்ஜூன் என பட்டப் பெயரும் வந்தது.

தற்போது இவரின் தாயாரான லக்ஷ்மி தேவாம்மா தனது 80 வது வயதில் காலமானார். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த இவரின் தாயார் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த செய்தியை கேட்டு தற்போது திரை உலகமே வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறது. லட்சுமி தேவம்மா அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் கிஷோர் கன்னட திரை உலகில் இயக்குனராக இருக்கிறார். மற்றொரு மகன் தான் அர்ஜுன். இவர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
