சமூக நீதி பேசுகிற திராவிட மாடலே எங்கள் பஞ்சமி நிலம் எங்கேஎன்று ஸ்டாலினிடம் கேள்விகளை எழுப்புகிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்.
65 ஆண்டுகாலம் சமூகநீதி மட்டுமே பேசி வரும் திமுக எங்கள் பஞ்சமி நிலம் எங்கே என சொல்ல முடியுமா என அவர் கேள்வி அனுப்பியுள்ளார். சென்னை மாகாணத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு தலித் மக்களிடம் கொடுத்தால் போதும். ஆனால் அதை இந்த திராவிட மாடல் அரசு செய்யுமா ? எனவே அதை செய்யாத திராவிடம் மாடல் அரசை புறக்கணிப்போம் என அவர் பேசியுள்ளார். இந்த பஞ்சமி நிலம் என்பது நிலமற்ற பட்டியல் இன ஏழை எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலமாகும்.

1892 ஆம் ஆண்டில் பிரிட்டன் அரசு தனிச் சட்டத்தை இதற்கென கொண்டு வந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆங்கில அரசாங்கமே இலவசமாக ஒதுக்கிய நிலத்தை பட்டியலின மக்களைத் தவிர வேறு யாரும் வாங்க கூடாது என்பது.தான் சட்டம். ஆனால் இந்த பஞ்சமி நிலத்தை தான் தற்போது பல அரசியல் சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நிலம் இல்லாத மக்கள் இன்னும் நிலம் இல்லாமலேயே இருக்கின்றனர்.
இதைப் பற்றி தான் தமிழ் இயக்குனர்கள் ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் தனது படங்கள் மூலம் பேசி வருகின்றனர். ஏன் பாமக நிறுவனர் ராமதாஸின் முரசொலி அறக்கட்டளையே பஞ்சமி நிலத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் அவரின் குற்றச்சாட்டுக்கு எதிராக திமுக தரப்பிலிருந்து அவர் மீது அவதூறு வழக்கு தொடங்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த அறக்கட்டளையின் மூல பாத்திரத்தை திமுக எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகிறது.

பெரியார் கடவுளை கல் என்று கூறினார். திமுகவின் கொள்கையும் கடவுள் மறுப்பு தான். அதனால் நான் கேட்கிறேன் கல்லுக்கு ஏன் அவ்வளவு பெரிய நிலம் தேவைப்படுகிறது ? நிலம் மனிதர்களுக்கு தான் தேவை தலித் மக்களுக்கு கொடுத்தாலே போதும். இன்று வரை அந்த நிலம் மீட்டு தரப்படவில்லை. அப்படி என்றால் மீட்டு தராத இந்த திராவிடம் மாடல் நமக்கு தேவையா என்றால் தேவையே இல்லை” என அவர் கூறியுள்ளார்.