பிரதமரின் நலத்திட்டங்கள், புதிய இந்தியா 2022 என நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பாக்யராஜ் அவர்கள் பேசினார். இந்த விழா பிஜேபி அலுவலகமான கமலாலயத்தில் நடத்தப்பட்டது.

அப்போது பேசிய பாக்கியராஜ் அவர்கள் “நரேந்திர மோடி தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார் இந்தியாவுக்கு மோடி போன்ற ஒரு ஆள்தான் தேவை, பிரதமரை எப்போதும் குறை கூறுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் அதனால் அவற்றையெல்லாம் கண்டு கொள்ள வேண்டாம் மூன்று மாத குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று அவர்களை கூறிவிட்டு கடந்து செல்லுங்கள்” என நரேந்திரமோடிக்கு பாக்கியராஜ் அவர்கள் டிப்ஸ் கொடுத்துள்ளார்.

மேலும் இதற்கு முன்பு இளையராஜா அவர்களும் மோடியை அம்பேத்கருக்கு நிகரானவர் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இப்போது பாக்கியராஜ் அவர்களும் அதை தொடர்ந்து மோடியை குறை கூறுபவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என பேசி மீண்டும் இவர் ஒரு தனி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.