ஆம்பூரில் நடைபெறும் பிரியாணி திருவிழாவில் பிப் பிரியாணியை தடை செய்யப்பட்டதற்கு எதிராக விடுதலை சிறுத்தை கட்சி, எஸ்டிபிஐ கட்சி, மற்றும் மனிதநேய கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆம்பூரில் பிரியாணி திருவிழா மாவட்ட நிர்வாகம் சார்பாக வருகிற 13, 14, 15 ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.அங்கு பீப் பிரியாணியை தவிர மற்ற பிரியாணிகளுக்கு விற்க அனுமதி மறுத்திருக்கின்றனர். இதனை எதிர்த்து சில இஸ்லாமிய சங்கங்கள், விடுதலை சிறுத்தை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி போன்று காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆம்பூரில் விற்கும் பிரியாணிக்கு எப்போதுமே மவுசு அதிகம் தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் இருந்து வந்து ஆம்பூரில் பிரியாணி சாப்பிட்டு செல்வார்கள். வேலூர், திருப்பத்தூர், வரும்போதெல்லாம் ஆம்பூருக்கு கட்டாயமாக வந்து பலரும் பிரியாணி சாப்பிட்டு சென்றிருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு இடத்தில் பிரியாணி திருவிழா நடக்கும்போது அதில் ஏன் பீப் பிரியாணியை மட்டும் தடை செய்கிறீர்கள். அங்கு முயல் கறி, ஆட்டுக் கறி போன்றவற்றை விற்கும் நீங்கள் மாட்டுக்கறியை ஏன் விற்கு மறுக்கிறீர்கள் ஒரு உணவை திணிப்பதும் தப்பு தடுப்பதும் தப்பு அவர்களுக்கு பிடித்த உணவை அவர்கள் வாங்கி சாப்பிட போறார்கள் அதற்கு ஏன் நீங்கள் தடை விதிக்கிறீர்கள் ? கொஞ்சம் கொஞ்சமாக பாஜகவின் சித்தாந்தத்தை உள்ளே நுழைக்க பார்க்கிறீர்கள்.
1 வருடத்திற்குள் குழந்தையை பெற்று ஏன் கையில் தர சொல்லுங்கள் | மகன் மேல் வினோதமான கேஸ் போட்ட அம்மா

ஆம்பூர் என்ன வட இந்தியாவ ? அதனால் தடையை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த ஆம்பூர் பிரியாணி திருவிழா நடக்கும் இடத்திற்கு எதிரில் நாங்கள் பிரியாணியை இலவசமாக எல்லோருக்கும் வழங்குவோம் அதனால் இதற்கு ஒரு தீர்வு கட்டாயமாக கொண்டுவர வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறியிருக்கின்றது. இதற்கு மனிதநேய மக்கள் கட்சி மற்றும் எஸ்டிபிஐ கட்சி ஆதரவு அதிகரிக்கிறது.
