உத்திரபிரதேச சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் புகையிலை போடும் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல்வாதிகளிலிருந்து பாமர மக்கள் வரையில் போதைப்பொருள் உபயோகித்தல் அதிகமாகி வருகிறது. நம்முடைய தமிழ்நாட்டிலும் இதை மாணவர்களும் உபயோகிக்க தொடங்கி விட்டனர். அந்த அளவிற்கு போதைப்பொருள் விநியோகம். தற்போது உத்தர பிரதேசத்தில் சட்ட பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்த கூட்டத்திற்கு நடுவே எம்எல்ஏ ஒருவர் யாருக்கும் தெரியாமல் பாக்கெட்டில் போட்டு கொண்டு வந்த புகையிலை வெளியே எடுத்து இருக்கைக்கு அடியில் வைத்து உபயோகிக்கிறார்.
வெள்ளை நிற மேலாடையை அணிந்து முன்னழகை காட்டி வசீகரிக்கும் நடிகை ரம்யா பாண்டியன்

இவரின் இந்த செயலை சட்டப்பேரவைக்குள்ளேயே ஒருவர் வீடியோவும் எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ மிகவும் வைரலாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ரெட்டி தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
