44ஆவது செஸ் ஒலிம்பியட் போட்டி மாமல்லபுரத்தில் பூந்தேறி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாயிண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 ஸ்டார் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இன்று முதல் அடுத்த 10 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் அங்கு நடைபெறுகிறது.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் 187 நாடுகளில் இருந்து பங்கேற்க உள்ளனர். போட்டியில் தொடக்க விழா இன்று மாலை 6 மணி அளவில் சென்னை ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. விழாவில் கலந்துகொண்டு பேட்டியை தொடங்கி வைக்க உள்ளார் மோடி.
இதற்காக அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து தனி ராணுவ விமானத்தின் மூலம் புறப்பட்டு மாலை 5 மணி அளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி ஆர் பாலு எம்பி உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் அடையாறு கடற்கரை தளம் வருகை தரும் பிரதமர் அங்கிருந்து தொடக்க விழாவுகாக நேரு ஸ்டேடியத்திற்கு காரில் செல்கிறார்.

