விருமன் படம் வெளியான திரையரங்க வாசலில் நான் அதிதியை லவ் பண்றேன் எங்களுடைய காதலை சேர்த்து வையுங்க இல்லனா கமிஷனர் ஆபீஸ் முன்பு வென்று விடுவேன் என சங்கரிடம் சவால் விடுவது போன்று மீடியா முன் பேசினார் இதை கண்டு ஆத்திரமடைந்த சங்கர் தற்போது கூல் சுரேஷை அடக்கி இருக்கிறார்.
இப்போதெல்லாம் எந்த படம் வெளியானாலும் அந்த படத்தின் தியேட்டரின் வாசலில் வெளியே ஒரு முகத்தை நாம் எப்போதுமே பார்க்க முடியும். போனை எடுத்து இன்டர்நெட் ஆன் செய்து சோசியல் மீடியா பக்கம் போனாலே இவரின் முகம் தான் வரும். அந்த அளவிற்கு பிரபலமான இவர் கடந்து சில வாரங்களில் வெளியான படங்களில் வெளியீடு பொது தலைகாட்டி அந்த படங்களுக்கான விமர்சனங்களை தருவார். லெஜன்ட் படத்துக்கும் நல்ல விமர்சனத்தை இவர் தந்திருக்கிறார். தற்போது விருமன் படம் வெளியான போது கூல் சுரேஷ் அவர்கள் அந்த படத்தின் கதாநாயகியை மிகவும் வர்ணித்து நான் காதல் செய்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.
இது முதல் முறையல்ல இதற்கு முன்பு கூட பல படங்கள் வெளியான போது அந்த கதாநாயகிகளின் அழகை வர்ணித்து கூல் சுரேஷ் எல்லை மீறி பேசி வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். தற்போது விருமன் படம் பார்த்துவிட்டு அதிதி சங்கரை பற்றி கூறிய அவர் :- “டைரக்டர் சங்கர் சார் உங்க படத்துல மட்டும் தான் காதலை வாழ வைப்பீங்க அப்படின்னா என்னோட காதலா வாழ வைக்க மாட்டீங்கல ? உங்க பொண்ணு அதிதியை நான் லவ் பண்றேன். அவங்க என்னுடைய காதலி நீங்க என்னுடைய காதல சேர்த்து வைக்கவில்லை என்றால் நான் நேரா கமிஷனர் ஆபீஸ் தான் போவேன்.
அங்க போயி என்னோட காதலை வாழவைங்கன்னு சொல்லி கமிஷனரிடம் மனு கொடுப்பேன் எதுவும் முடியலன்னா முதல்வர் வீட்டு முன்னால வந்து உண்ணாவிரதம் இருப்பேன். நான் மட்டுமல்ல என்னோட காதலி அதிதியும் சேர்த்து தான் இந்த உண்ணாவிரதம் இருப்பேன். தயவு செய்து சங்கர் சார் என்னோட காதலை ஏற்றுக் கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார். மேலும் பேசி அவர் தகாத வார்த்தைகளில் உங்கள் படத்தைப் போலவே உங்கள் மகளையும் பிரம்மாண்டமாக தான் வளர்த்து இருக்கிறீர்கள் என ஜாடையாக பேசி உள்ளார். மேலும் வீட்டுக்கு வரவைத்து அவரை கய்த்து கட்டிலில் உட்கார வைத்து கால் அமுக்கி கண்கலங்காமல் பார்த்துகிறேன். தயவுசெய்து என் காதலை வாழவைங்க சங்கர் சார் மேலும் அதிதிக்கு நான் முத்தம் கொடுக்கிறேன் ஐ லவ் யூ அதிதி எனக் கூறி அந்த உரையை முடித்தார்.

இதனைப் பார்த்து மிகவும் கடுப்பான சங்கர் அவர்கள் கூல் சுரேஷை அழைத்து கடுமையாக திட்டி இருக்கிறார். எல்லை மீறிய பேச்சை வாபஸ் வாங்க வேண்டும் அப்படி வாபஸ் வாங்காமல் போனால் நான் சட்ட ரீதியான நடவடிக்கைகளில் உன் மேல் எடுப்பேன் என்று கூறிய ிருக்கிறார். அதை தொடர்ந்து தற்போது மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் தனது பேச்சை நான் குறைத்துக் கொண்டேன் நான் பேசியதை வாபஸ் வாங்கி விடுகிறேன். அதிதி எனக்கு தங்கச்சி போல என கூறி இருக்கிறார்.
நான் உணர்ச்சி வசப்பட்டு பேசியது தவறுதான். அதிதி தங்கச்சி அண்ணன் என்ன மன்னிச்சிடுமா, சங்கர் சார் நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க அப்படின்னு சொல்லிக்கிறேன் என அவர் கூறியிருக்கிறார். மைக் நீட்டும் போது உணர்ச்சிவசப்பட்டு நடிகைகளை அழகை வர்ணிக்கிறேன் என்ற பெயரில் அவர்களை கடுமையாக தாக்கி விட்டு தற்போது மன்னிப்பு கேட்கும் இந்த கூல் சுரேஷை இணையவாசிகள் வெளுத்து வாங்கி வருகின்றனர். அதனால் எதை பேச வேண்டும் என்றாலும் இடம் பொருள் ஏவல் பார்த்து பேச வேண்டும் எனவும் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
