குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டில் வின்னர் யார் தெரியுமா ? பரிசுத்தொகை இவ்வளவா ?

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இன்று இறுதி நாளுக்கான நிகழ்ச்சி நடந்து முடிவடைந்து இருக்கிறது. அதில் டைட்டில் வின்னர் ஆக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில் அவருக்கான பரிசுத்தொகை பற்றிய விவரங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக ரியாலிட்டி ஷோக்களில் அதிகமான ரசிகர்களின் நன்மதிப்பை பெற்ற ரியாலிட்டி ஷோவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகத்தான் தற்போது நான்காவது சீசன் வரைக்கும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக வந்திருக்கிறது.

எப்போதும் காமெடிக்கு அதிகமா வரவேற்பு இருக்க தான் செய்கிறது. அந்த மாதிரி தான் டைமிங் காமெடி ஆக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் ரசிகர்களால் தொடர்ச்சியாக ரசிக்கப்பட்டு வருவதால் தான் அதிகமான டிஆர்பியும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பைனல் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் யார் டைட்டில் வின்னர் ஆக வருவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், அதில் டைட்டில் வின்னராக மைம் கோபி வெற்றி பெற்றிருக்கிறார்.அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடம் ஸ்ருஷ்டிக்கும் மூன்றாவது இடம் விசித்திராவிற்கும் கிடைத்து இருக்கிறது.

3 சென்ட் நிலம் வாங்கி தரேன் ! வீடு கட்ட ..பாஜக நிர்வாகியை ஸ்தம்பிக்க வைத்த அண்ணாமலை !

அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு என்றும், இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றவருக்கு 3 லட்சம் ரூபாய் பரிசு என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் வெற்றி பெற்ற கோப்பை மற்றும் பதக்கங்களோடு மைம் கோபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,” ஜெயிச்சிட்டோம் தம்பிகளா, சப்போர்ட் பண்ண எல்லோருக்கும் நன்றிகள்” என்று புகைப்படம் வெளியிட்டு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

Spread the love

Related Posts

“நான் ஐஸ்வர்யா பினாமிங்க….” ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடிய பணிபெண்ணின் திடுக்கிடும் வாக்குமூலம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார்

“முதலமைச்சருக்கு ரம்ஜான், கிறித்துமஸ்க்கு மட்டும் வாழ்த்து சொல்ல நேரமிருக்கு ஆனா தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல நேரமில்லை” – ஸ்டாலினை சீண்டிய தமிழிசை

காவியும் ஆன்மீகமும் சேர்ந்ததுதான் தமிழகம். அதைப் பிரிக்க முடியாது அதை பிரிக்க சில சக்திகள் செயல்பட்டு

காமெடியில் பின்னி பெடல் … கிராமத்து கதைக்களம் கொண்ட நகைச்சுவை திரைப்படம் | கிடாயின் கருணை மனு பட இயக்குனரின் அடுத்த படைப்பு

இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் பிரேம்ஜி, கே ஜி மோகன், ரேஷ்மா பசுபெல்ட்டி போன்றோர்கள் நடித்து

Latest News

Big Stories