டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மருத்துவமனையில் அனுமதி.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்தான விளக்கம் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதாகவும் முன்னெச்சரிக்கையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அன்பில் மகேஷுக்கு உரிய சிகிச்சைகளை மருத்துவர்கள் வழங்கி வருவதாகவும், அவர் கூடிய சீக்கிரம் நலமுடன் திரும்பி வருவார் என்றும் அமைச்சர் மா சுபிரமணியன் கூறியுள்ளார்.
