திமுகவை சேர்ந்த நிர்வாகியிடம் சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கேட்டதும் பிரியாணி கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரியாணி கடை தான் ak ரெஸ்டாரன்ட். அங்கே பிரியாணி சாப்பிட வந்த திருப்பூண்டி காரைநகர் 3 ஆவது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் ஞானசுந்தரி கனவர் சுரேஷ், சிபிஐ கட்சியைச் சேர்ந்த கடுக்கா பக்கிரி, சிபிஎம் கட்சியைச் சேர்ந்த கட்ட அஞ்சான் ஆகியோர் பிரியாணி சாப்பிட்ட பிறகு கடை உரிமையாளர் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கொடுக்காமல் சென்றுள்ளார்.
அண்ணாமலையை புறக்கணியுங்கள் | வன்னியர்களிடம் காடுவெட்டி குருவின் மகள் கோரிக்கை

இதை தட்டிக்கேட்ட அங்கிருந்த ஒரு பணிப்பெண்ணை தாக்கியதோடு மட்டுமல்லாமல் பிரியாணி கடையை அடித்து நொருக்கியுள்ளனர். மேலும் அந்த பணிப்பெண்ணை தகாத வார்த்தையில் பேசி தாக்கும் போது அங்கிருந்த சக மக்கள் உடனே வந்து அதைத் தடுத்து நிறுத்தினார். இது தொடர்பான விஷயம் வணிக சங்கத்திற்கு தெரிந்த உடனே இந்த சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக முஸ்லீம் அமைப்பினரும் வணிக சங்கத்தினரும் இன்று நாகை திருத்துறைபூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் பிரச்னையை கண்டறிந்து சம்பந்தப்பட்ட ஆட்களை கூடிய சீக்கிரம் கைது செய்கிறோம் என்று உறுதியளித்த பிறகே அவர்கள் கலைந்து சென்றனர்.
