ஓடும் ஆறு ஒன்றில் நாயின் கழுத்தில் கல்லை கட்டி ஆற்றில் இறக்கும் இந்த கொடூர சிறுவர்களின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்லார்பூர் தாலுகாவில் ஒரு வாரத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஓடும் ஆறு ஒன்றில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் அடித்து செல்லப்படுகிறது. அப்போது ஒரு மூன்று சிறுவர்கள் நாயின் கழுத்தில் பெரிய கல்லை கட்டி அந்த நாயை தண்ணீரில் இறக்க முயற்சிக்கின்றனர். முதலில் எவ்வளவோ போராடியும் அந்த நாய் அவர்களை மீறி ஓட முற்படுகிறது. ஆனாலும் அவற்றை ஓட விடாமல் பிடித்து தண்ணீரில் தள்ளுகின்றனர்.


அந்த தண்ணீரில் தத்தளித்து வந்த அந்த நாய் பின்னர் அந்த தண்ணீரில் இருந்து எப்படியோ தப்பித்து மேலே வந்து விடுகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களை மிகவும் பதற வைக்கிறது. ஏனென்றால் நாயை செல்ல பிராணிகளாக வீட்டில் வளர்க்கும் பலர் நம் சமூகத்தில் உண்டு. அவர்களெல்லாம் இம்மாதிரியான வீடியோக்களை பார்த்தால் மிகவும் கோபமும் அச்சமும் ஏற்படும்.
ஆசிரியர் முடி வெட்ட சொன்னதால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்று 12th மாணவன்


தற்போது விலங்கு நல ஆர்வலர் ஒருவர் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஐ பி சி 11 (1), 119 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
The incident happened 3 days back on 13 July 22 in Daheli village , Bamni (Ballarsha) and the person name is Dinkar Gaikwad.(maharashtra)
— 🇮🇳Pratham Bisht (@PrathamBisht12) July 18, 2022
Please share the video !! And give justice to poor Dog.@asharmeet02 @pfaindia @MumbaiPolice @DGPMaharashtra @TheJohnAbraham @SonuSood pic.twitter.com/T89nZF8vVB