தனி ஒரு மனிதராக நான் அண்ணாமலையை பாராட்டுகிறேன் எனக் கூறியிருக்கிறார் திமுக அமைச்சர் துரைமுருகன்.
திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலம் முதலில் இருந்தே திமுகவையும் திமுகவில் இருக்கும் அமைச்சர்களையும் மிகவும் ஏளனமாக பேசி குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்துக் கொண்டு போகிறார் அண்ணாமலை. இவர் ஒரு ஆளுக்காக திமுக அரசும் இவர் வாயில் வந்து விடக்கூடாது என்பதற்காக முடிந்த அளவு விமர்சனங்கள் இல்லாத செயல்களையே செய்து வந்தனர். இருந்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடித்த தொடர்ந்து திமுகவை சாடிக்கொண்டே வந்தார் அண்ணாமலை.

என்னதான் பிரதான எதிர் கட்சி அதிமுகவாக இருந்தாலும் பிஜேபி தான் பிரதான எதிர்க்கட்சி என்று சொல்லும் அளவிற்கு தற்போது அண்ணாமலை வளர்ந்திருக்கிறார். மேலும் இதைப்பற்றி ஒரு பேட்டியில் அமைச்சர் துரைமுருகன் அவர்களும் அண்ணாமலையை பற்றி பாராட்டி பேசி இருக்கிறார்கள். அவரிடம் அண்ணாமலையின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறியது என்னவென்றால் :- “நான் பாராட்டுகிறேன், தனி மனிதனாக இருந்து சளைக்காமல் பேசுகிறார், போகிறார், வருகிறார் அவர் பேசும் கருத்தில் கொள்கையிலும் மாறுபாடு இருக்கலாம். ஆனால் அவரின் ஆர்வத்தை வேகத்தை நான் பாராட்டுகிறேன்” என பேட்டியளித்து இருக்கின்றார். இப்படி இவர் அண்ணாமலையை பற்றி பாராட்டு பேசியுள்ளதால் சில திமுக தொண்டர்களும் அமைச்சர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
