மேலும் அவர் பல விஷயங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சிவபதி இல்லத் திருவிழா வரவேற்பு விழாவில் கலந்து விட்டு சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்களில் சந்தித்து பேசினார் அப்போது :- “ஜெயலலிதா மரணம் குறித்து வெளியான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை பற்றி எந்த ஒரு விஷயத்தையும் சொல்லப்போவது இல்லை என்று கூறியுள்ளார்.
அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது ஓ பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு. அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றலாமா வேண்டாமா என்பது குறித்து தொண்டர்களின் நிலைப்பாடு தான் எனக்கு முக்கியம். என்னுடைய தனிப்பட்ட கருத்து எதுவும் அல்ல, அவர்க்கு முதலமைச்சர் ஆவதற்கு கட்சித் தலைவர் ஆவதற்கு எனக்கு ஆசை இல்லை என்று கூறிய ஓ பன்னீர் செல்வத்திற்கு தற்போது ஏன் பதவி ஆசை வந்துள்ளது ? தலைமை கழகத்திற்குள் அத்து மீறி கம்ப்யூட்டர்களை சேதப்படுத்தி உள்ளார்.

தேவையில்லாமல் இந்த பிரச்சனைகளை உருவாக்குவது யார் அவருக்கு பின்னாடி இருந்து அவரை செயல்படுத்துவது யார் என கேட்டுள்ளார். இதற்கு பிறகு எட்டு வழி சாலை பற்றி பேசிய அவர் அப்போது நாங்கள் இந்த திட்டத்தை கொண்டு வரும்போது இப்போது திமுகவிடம் கூட்டணி கட்சிகளாக இருக்கின்ற பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது அந்த எதிர்க்கட்சிகள் மௌனம் சாதித்து வருகின்றனர். இதுதான் திராவிட மாடலா இந்த திட்டம் வந்துவிட்டால் நாங்கள் நல்ல பெயரை சம்பாதித்து விடுவோம் என்ற எண்ணத்தில் அப்போது இருந்த திமுகவினர்கள் திட்டமிட்டு சாதி செய்து எங்களை புறக்கணித்தனர். இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தினர். அதிமுக என்பது தொண்டர்களின் கட்சி தொண்டர்களின் விருப்பத்தை தான் நாங்கள் நிறைவேற்றுவோம். மக்களுக்கு அதிமுக மீது தவறான கருத்து இருந்தால் நான் சொல்லுகிற இடங்களுக்கு இவ்வளவு மக்கள் திரளுவார்களா ? எம்ஜிஆர் இறந்த போதும் சரி ஜெயலலிதா இறந்த போதும் சரி அதிமுக எப்போதுமே தனித்து நிற்கும் இயக்கம் அந்த இருபெரும் தலைவர்கள் வழியில் தான் நாங்களும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
“அமிட்ஷா-வே ஒரு குற்றவாளி…” செய்தியாளருக்கு நெத்தியடி பதிலளித்த இயக்குனர் அமீர்
மேலும் ஆறு குட்டி போல வேறு எந்த குட்டியும் இனிமேல் எங்களை விட்டு போகாது என கூறியுள்ள அவர் மக்களிடம் வாக்குறுதிகள் கூறியது நிறைவேற்ற முடியாததால் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களை சந்திக்க முடியவில்லை அதனால் கூட்டங்களிலிருந்து வெளிநடப்பு செய்கின்றனர் எனவும் அந்த செய்தியாளர் சந்திப்பில் இவர் கூறியுள்ளார்.
