நித்தியானந்தா ஆசிரமத்தில் தனது மகளை கடத்திக் கொண்டு சென்று இருக்கிறார் என பெங்களூருவை சேர்ந்த ஒருவர் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
நாகேஷ் பெங்களூரை சேர்ந்தவர். கர்நாடக மாநிலத்தில் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை பல்வேறு சேவைகளை செய்து வந்தவர். இரண்டு ஆண்டுகள் கழித்து அவரது மனைவி மற்றும் மகள் ஆசிரமத்தில் இருந்து வெளியேறினர். மேலும் இரண்டாவது மகள் மட்டும் ஆசிரமத்திலேயே தங்கி தொடர்ந்து வேலைகளை செய்து வந்தார். இவரும் நேரில் சென்று மகளை பார்த்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவர் அங்கே இல்லை பிடதி ஆசிரமத்தை தொடர்பு கொண்டு தனது மகளை காண்பிக்குமாறு கேட்டோம் அந்த தனது மகளை அவர் தொடர்பு கொள்ள முடியவில்லை.
காட்டுக்குள் வெறும் ட்ரவுசருடன் சுற்றி திரியும் குக் வித் கோமாளி நடிகை தர்ஷா | வீடியோ வெளிவந்தது

இதனை அடுத்து அந்த ஆசிரமத்தில் இருந்து எனது மகளை மீட்டுத் தாருங்கள் என கர்நாடகா போலீசாரிடம் சில நாட்களுக்கு முன்பு நாகேஷ் புகார் கொடுத்தார். அவரது மகள் வேறு இடத்திற்கு இடம் மாறபட்டதாக இவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவர் தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் அவரது மகள் இருப்பதாக தகவல் வந்துள்ளது.
அந்த தகவலின் பேரில் அவர் அங்கு சென்று திருவண்ணாமலை போலீசாரிடம் இது குறித்து பேசி தனது மகளை மீட்டுத்தருமாறு புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் நேற்று இரவு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி தலைமையில் போலீசார் நித்யானந்தா ஆசிரமத்திற்கு நாகேஷும் மற்றும் அவரது மனைவியையும் நேரில் கூட்டி சென்று சோதனை நடத்தினர். ஆனால் அவரது மகள் அங்கும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அங்கிருந்து இவர்கள் புறப்பட்டுச் சென்றனர். மேலும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மகனை போலீசார் மீட்டு தருவார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
