நான்கு மாதங்களே ஆன சினை ஆட்டை கூட்டு பலாத்காரம் செய்ததால் தமிழகத்தை சேர்ந்த ஒருவரை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர் மற்ற 2 பேர் தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் கேரளா காசர்கோடு பகுதியில் நடைபெற்றுள்ளது .அங்கு ஒரு உணவகத்தில் நான்கு மாதங்களே ஆனா ஒரு சினை ஆடு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1:30 மணி அளவில் அந்த சீனை ஆடு அலறும் சத்தம் கேட்டுள்ளது. இந்த நேரத்தில் சத்தம் கேட்கிறதே என்று உணவக ஊழியர்கள் எழுந்து பார்த்துள்ளனர். அப்போது அந்த சினை ஆட்டை மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருப்பது கண்டறியப்பட்டது.

அதனால் அவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் வருவதை கண்ட அந்த நபர்கள் தப்பிக்க முயற்சி செய்தனர். அதில் ஒருவரை மட்டும் ஓடிப் பிடித்து விட்டனர். மற்ற இரண்டு பேர் தப்பித்து விட்டனர். இதனை அறிந்த போலீசார் அங்கு வந்து தமிழகத்தை சேர்ந்த அந்த நபரை கைது செய்தனர். இத்தனைக்கும் அவர் அந்த உணவகத்திலேயே பணிபுரியும் ஊழியர் ஆவார்.
இதைதொடர்ந்து தப்பிச் சென்று இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் விலங்குகள் வதை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நான்கு மாதங்களே ஆன சினை ஆட்டை இப்படி பாலியல் வன்கொடுமை செய்த இந்த சம்பவம் அந்த பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
