நேற்று ஹைதராபாத் வீதியில் பட்டப்பகலில் ஒரு பெண்ணை கத்தியால் குத்திவிட்டு சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழைய நகரில் உள்ள ஆபீஸ் பாபா நகரில் பரபரப்பான சாலையில் இந்த சம்பவம் பட்டப்பகலில் நடந்திருக்கிறது. இந்த கல்யாணமான பெண்ணை நடு வீதியில் துரத்தி சென்று ஒளித்து வைத்திருந்த கத்தியை கொண்டு தாக்குவது இந்த வீடியோவில் காண முடிகிறது. அதில் அந்தப் பெண் நிலைகுலைந்து கீழே விழுந்த போதும் மக்கள் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. அந்த சம்பவத்தை பயத்துடன் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தனர். தொடர்ந்து அந்த பெண்ணை அவன் கத்தியால் குத்திவிட்டு எதுவும் நடக்காதது போல நாடக்கீறார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கத்தியை காட்டி அவரை பின்வாங்கச் செய்தார்.

மக்கள் பலரும் இதை அதிர்ச்சியுடன் அப்படியே உறைந்து நின்று பார்த்தனர். இந்த விஷயம் கேட்டு தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் காயம் அடைந்த அப்பெண்மணியை உடனடியாக அங்கிருந்து ஆம்புலன்ஸில் அழைத்து சென்றனர். அங்கு அவர் நல்ல நிலைமையில் இருக்கிறார் என்ற செய்திகளும் தற்போது கிடைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர். ஆறு குழந்தைகளின் தாயான அவர் தனது அண்டை வீட்டாருடன் துன்புறுத்தப்படுவதாக பின்தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து கடந்த ஆண்டு போலீசில் புகார் அளித்தனர். அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். நடுரோட்டில் பட்டப்பகலில் ஒரு வயதான பெண்ணை இப்படி தாக்குவது, அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
A married woman was critically injured after she was stabbed by her stalker in broad daylight in #Hyderabad on Friday. pic.twitter.com/vtxly9x206
— IANS (@ians_india) May 27, 2022