விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூகுள் பே மூலம் கலாச்சாராயம் விற்பனை அமோகமாக நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு அடர்ந்த வனப்பகுதியாக கருதப்படும் ஒரு இடம்தான் கல்வராயன்மலை. இந்த மலையின் உள்ள ஓடைகளில் வரும் மழை நீரை பயன்படுத்தி சமூக விரோதிகள் பலரும் சாராயத்தை காய்ச்சி அதனை கடலூர், சேலம், விழுப்புரம், புதுச்சேரி என பக்கத்து மாநிலங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த கல்வராயன் மலை அடிவார பகுதியில் உள்ள சில கிராமங்களில் சாராயம் விற்பனை செய்ய பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் விடப்படும் அவலமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
சன் டிவி சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி தீடீர் திருமணம் | மாப்பிள்ளை இவரா ?

ஏலம் எடுப்பவர்கள் கிராமப்புறங்களில் காய்கறி விற்பதை போன்று கள்ளச்சாராயத்தை விற்று வருகின்றனர். போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் இருப்பினும் கள்ளச்சாராய வியாபாரம் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் வெங்கடேசன் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருகிறார் அவரின் மறைமுகமாகவும் சட்டத்துக்கு எதிராகவும் கள்ளச்சாராயம் விற்பனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கூகுள் பே மூலம் இரண்டு லிட்டர் சாராயம் வாங்குபவர்களுக்கு அரை லிட்டர் சாராயம் இலவசம் என தெரிவித்துள்ளார். இதனால் விற்பனையாளர்கள் அவர்களிடம் கள்ளச்சாராயத்தை வாங்க அலைகடல் என திரண்டு இருக்கின்றனர். இந்த தகவல் காட்டு தீயை பரவிய நிலையில் தற்போது காவல்துறையினர் விசாரணையும் தொடங்கியுள்ளது என செய்திகள் வந்துள்ளது.
