யூடுயூபெர் இர்பான் செய்தி சேனல்களை கடுமையாக விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கடந்த வாரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரோஸ் வாட்டர் என்று ரெஸ்டாரண்ட்க்கு சென்று 40 கிலோ கெட்டுப்போன மாமிசத்தை வைத்து இருப்பதை கன்றனித்துள்ளனர். இதனை கண்டித்து சென்னையில் உள்ள அந்த ரெஸ்டாரன்ட் இருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து இனிமேல் இப்படி தவறு நடத்தக் கூடாது என எச்சரிக்கை சென்றனர். அந்த ஓட்டலில் தான் இர்பான் உணவை சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என கூறியுள்ளார். அதனால் உணவு சாப்பிட அங்கு சென்று விட்டு இர்பான் காசு வாங்கி கொண்டு நல்ல ரீவியூ தருகின்றார் இர்பான்.

இவரை கண்டிக்க வேண்டும் என்று செய்தி சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் இவரை டார் டாராக கிழித்திருக்கின்றனர். இதனால் பொங்கி எழுந்த இர்ஃபான் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு கடைக்கு நான் சென்று சாப்பிட்டுவிட்டு ரிவ்யூ செய்கிறேன் என்றால் அதை எப்படி நீங்கள் ஓசி சோறு சாப்பிடுகிறேன் என்று சொல்ல முடியும் ? நான் ஓசி சோறு சாப்பிடுவதை நீங்கள் பார்த்தீர்களா ? இல்லை நீங்கள் எனக்கு வாங்கி கொடுத்தீர்களா ? நான் எந்த ஒரு ஹோட்டலுக்கு சென்றும் சாப்பாடு நன்றாக இல்லை என சொன்னது கிடையாது. அதேபோல் கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்டு நன்றாக உள்ளது என சொன்னதும் கிடையாது.
என்னை எப்படி நீங்கள் ஓசி சோறு என்று அழைக்கலாம் ? அதனால் இனிமேல் புரிந்து கொள்ளுங்கள் நாங்கள் ஒன்றும் உணவு அதிகாரிகள் அல்ல. ஜஸ்ட் உணவை சாப்பிட்டு விட்டு வெளியே சொல்பவன் அவ்வளவுதான். அப்படி என்னை நீங்கள் குறை சொல்ல வேண்டுமானால் நான் ஒரு உணவு அதிகாரியாக இருந்து நான் தவறு செய்திருந்தால் நீங்கள் என்னை குறை கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என தன் பக்க நியாயத்தினை அந்த வீடியோவில் பேசினார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
