திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தேசிய விருது வாங்கிய சூரியா அவர்கள் சிபாரிசு மூலம்தான் பெற்றாரா என கேள்வி எழுப்பும் வகையில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாக ஷேர் ஆகி வருகிறது.
நேற்று 68வது தேசிய திரைப்பட விருது அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் உலக தரத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு இந்திய படங்களுக்கு விருதுகளை அறிவித்தனர். அதில் தமிழ் திரைப்படமான சூரரை போற்று படத்திற்கு மட்டும் ஐந்து விருதுகள் கிடைத்தது. அதாவது சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த திரைப்படம் என இத்தனை விருதுகளை வென்று குவித்தது. அதோடு நடிகர் சூர்யாவிற்கு கிடைக்கும் முதல் தேசிய விருது இதுதான். அப்படிப்பட்ட இந்த விருதை சூரியா சிபாரிசு பெற்று வாங்கி இருக்கிறாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

ஏனென்றால் வலை பேச்சு என்கிற youtube தளத்தில் திரைப்பட விமர்சகராக இருப்பவர் தான் பிஸ்மி. இவர் போட்டு உள்ள ஒரு பதிவில் நடிகர் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை தேசிய திரைப்பட விருது தேர்வு குழுவில் இடம் பெற்றிருப்பதால், சூர்யாவுகோ அல்லது அவரது படத்துக்கோ விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என கோரி ஒரு குண்டை போட்டு இருக்கிறார். இவர் இந்த பதிவை சூர்யாவிற்கு விருது அறிவிப்பதற்கு முன்பே பதிவிட்டிருந்தார். தற்போதும் அதே போல் தான் சூர்யாவின் படத்திற்கு அவர் சொல்லி வைத்தது போல பல விருதுகள் கிடைத்துள்ளது.
தற்போது அந்த பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து சூர்யாவிற்கு விருதினை அறிவிக்கப்பட்ட அந்த நொடியில் இருந்து பரப்பி வருகின்றனர். இந்த போட்டோ ப்ளூ சட்டை மாறன் கண்ணில் பட அதை தனது ட்விட்டர் வலைதளத்தில் பதிவிட்டு மிஸ்டர் சூர்யா இதற்காக உங்கள் ரிப்ளை என்ன என வார்த்தைகளை போட்டு பதிவிட்டு இருக்கிறார். தற்போது ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவு இணையதளம் எங்கும் தீயாய் பரவுகிறது. ஒருவேளை சூர்யா சிபாரிசு செய்துதான் இந்த விருதினை பெற்றிருக்கிறார் என்று சிலர் சந்தேகிக்க ஒரு சிலர் இப்படி எல்லாம் சிபாரிசு செய்து தேசிய விருதை வாங்க முடியாது தேசிய விருது என்பது சிறந்த கலைஞர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதனால் சூர்யா அதை சிபாரிசு செய்து வாங்கவில்லை என்றும் ஒரு தரப்பு கூறி வருகிறது. அதனால் இதில் எது உண்மை என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
