உத்தரப்பிரதேசத்தில் மதராசா பள்ளிகளில் கட்டாயமாக தேசிய கீதம் பாட வேண்டும் என்று கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் இரண்டாவது முறையாக யோகி ஆதித்யானத் தனது முதல்வர் பதவியை தக்க வைத்துள்ளார். மீண்டும் முதல்வர் பதவிக்கு வந்து ஆட்சி செய்து கொண்டிருக்கும் யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேசம் முழுவதும் தேசியகீதம் பாடுவது கட்டாயம் என கூறியுள்ளார். இருப்பினும் சில மதராசா பள்ளிகளில் இந்திய தேசிய கீதம் பாட படுவதில்லை என புகார் எழுப்பப்பட்டது. மதராச பள்ளிகளில் மாணவர்கள் ரம்ஜான் விடுமுறைக்காக ஊருக்கு சென்று தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன.
ஆம்பூர் பிரியாணி திருவிழாவை தற்காலிகமாக ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்

இந்த நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறதோ அப்போதிலிருந்து நீங்கள் தேசியகீதம் பாடுவது கட்டாயம் என பள்ளி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதை பின்பற்றுவதை மாவட்ட சிறுபான்மை நல அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் டெனீஸ்வரன் சாரி கூறுகையில் :- “சிறுபான்மை மக்களுக்கு மதராச பள்ளியின் கல்வி முக்கியமானது. அதோடு சேர்த்து தேசிய கீதம் பாடப்படுவது மிகவும் முக்கியமானது. அவர்கள் சமூகத்தின் மதிப்பை நன்கு அறிவார்கள் இப்போது கணிதம், அறிவியல், கணினி உள்ளிட்ட பிற பாடங்களில் இஸ்லாமிய மத நூல்களையும் மாணவர்கள் படித்து வருகின்றனர். மாநில அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த முயற்சி செய்து கொண்டு வருகிறது” என்று கூறியிருந்தார்.
