பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் ஹீரோக்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என பகீர் கிளப்பி உள்ளார். இந்த செய்தி தற்போது இணையதளம் எங்கும் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் 2002 இல் சினிமாவுக்குள் நுழைந்து 2004 இல் மர்டர் என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். சினிமாவுக்கு வந்த சில நாட்கள் சவாலான கதைகளை ஏற்று நடித்த இவர் பிறகு பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். இவர் தமிழில் தசாவதாரம் படத்தில் கமலுக்கு வில்லனாக வருவார். மேலும் ஒஸ்தி படத்தில் காலசல பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கும் இவர் தோன்றுவார் இப்படிப்பட்ட ரோல்களில் நடித்த இவர் ரீசன்டாக மேடையில் பேசும்போது பாலிவுட் சினிமாவில் நடிகர்களுக்கு ஒத்துழைப்பு தந்தால் தான் உங்களால் சினிமாவில் இருக்க முடியும் என கூறி பகீர் கிளப்பி உள்ளார்.

அதாவது இரவு நேரத்தில் கதாநாயகன் உங்களை கூப்பிட்டால் அவருடன் படுக்கைக்கு செல்ல வேண்டும். அவர் நில் என்றால் நிற்க வேண்டும். உக்காரு என்றால் உட்கார வேண்டும் இம்மாதிரியான ஹீரோக்களின் பேச்சை கேட்டால்தான் அவர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு போனால் தான் உங்களால் பாலிவுட் சினிமாவில் இருக்க முடியும் என்று பாலிவுட் சினிமாவை தாக்கி பேசி உள்ளார்.
சில முன்னணி ஹீரோக்கள் என்னுடன் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை ஏனென்றால் நான் அவர்களின் கட்டளையை கேட்க தயாராக இல்லாததால் தான். ஆனால் நான் அப்படிப்பட்ட பெண் இல்லை என்பதால் இப்படியான காரியங்களை செய்யாமல் எனக்கென ஒரு தனி பெயரை நான் பெற்று சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும் இவர் அது எந்தெந்த நடிகர் என்று பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் பேசிய இந்த பேச்சு பாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
