கர்நாடக மாநிலத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் பொதுவெளியில் ஒரு நபரால் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பாகல்கோட் மாவட்டத்தில் விநாயகர் நகர் பகுதியில் வழக்கறிஞர் சங்கீதா என்பவர் அவருக்கு அருகாமையில் வசிக்கும் மாதேஷ் என்பவரால் பொதுவெளியில் பயங்கரமாகத் தாக்கப்பட்டர்.
திருமண விழாவில் நெருப்பை பற்ற வைத்து கொண்டு வந்த தம்பதி வைரல் வீடியோ | மணமக்கள் ஷாக்

ஒரு கட்டத்தில் அங்கிருந்து நாற்காலியை எடுத்து தற்காத்துக்கொள்ள சங்கீதா முயற்சித்திருக்கிறார். எனினும் அவர் தொடர்ச்சியாக கொடூரத்தனமாக தாக்கி கொண்டே வருகிறார் அவர். வழக்கறிஞர் கொடூரமாக தாக்கும் சம்பவம் அங்கு இருக்கும் ஒரு நபரால் வீடியோ எடுக்கப்பட்டது.

வீடியோவில் அந்த காட்சி தெளிவாக பதிவாகியிருக்கிறது. அதில் அவர் எப்படி கொடூரமாக அவரை தாக்குகிறார் என்றும் எப்படி அதிவேகமாக தாக்கி அவறின் மீது ஆக்ரோஷத்தை அவர் காட்டுகிறார் என்றும் தெரிகிறது. மாதேஷ் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு போலீசார் அவரை கைது செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பொது வெளியில் ஒரு பெண் வழக்கறிஞர்கள் இப்படி தாக்கிய இந்த சம்பவம் இணையதளத்தில் வெளியானதில் இருந்து பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Trigger warning: A lawyer was brutally assaulted by a man named Mahantesh in Vinayak nagar, Bagalkot, Karnataka. pic.twitter.com/kZ3OpUeKbi
— Mohammed Zubair (@zoo_bear) May 14, 2022