சுட சுட கொதிக்கும் கூல் அண்டவிற்குள் தவறி விழுந்த நபர் | பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள் | அதன்பிறகு என்ன ஆனது ?

மதுரையில் பழங்காநத்தம் பகுதியில் கூல் காய்ச்சும் போது காக்கா வலிப்பு வந்த ஒருவர் அந்த அண்டாவில் தவறி விழும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு கோவில்களில் ஆடி மாதம் என்றாலே விழா கோலம் கொண்டு விடும். மேலும் அந்த மாதத்தில் சிறப்பு பூஜைகள் அலங்காரங்கள் செய்யப்படும். அதனால் அப்போது கூல் காய்ச்சும் வழக்கம் உண்டு. அப்போது மதுரையில் அப்படி ஒரு நிகழ்வில் நடந்த ஒரு விபத்தில் சிசிடிவி காட்சி தான் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் சேர்ந்த மேல் தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை அன்று பல்வேறு சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு கூல் காய்ச்சப்பட்டது. அப்போது முத்து மாரியம்மன் தரிசிக்க பொதுமக்கள் வரிசையாக நின்றனர். அந்த நேரத்தில் தான் இந்த சம்பவம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது திடீரென காக்கா வலிப்பு வந்து ஒருவர் நிலை தடுமாரி அப்படியே கூல் காய்ச்சும் அண்டாவிற்குள் விழுந்துள்ளார். இதை பார்த்ததும் அங்கு இருந்த மக்கள் பதறி அடித்து அவரை தூக்க முற்பட்டனர்.

Viral Video | என்னது இலவச பயணசீட்டை தொலைத்த பெண்ணுக்கு 100 ருபாய் அபராதமா ? | இது தான் திராவிட மாடல் விடியல் அரசா என நெட்டிசன்கள் கலாய்

ஆனால் எவ்வளவு சிரமப்பட்டும் அவரை வெளியே எடுக்க முடியவில்லை. அதனால் அந்த அண்டாவை அப்படியே கீழே சாய்த்து அவரை கடைசியாக வெளியே எடுத்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறி விட்டனர். கூலில் விழுந்து காயம் காரணமாக அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களை பதைபதைக்க வைத்திருக்கிறது.

Spread the love

Related Posts

Viral Video | ராஜபக்சேவின் மருமகள் உட்பட அவரின் குடும்பத்தார் தனி விமானம் மூலம் எஸ்கேப் ஆகி செல்லும் வீடியோ காட்சி வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது

இலங்கையில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்குள்ள பொருளாதார பிரச்சனையின் காரணமாகவும், மக்களின் எதிர்ப்பின்

முதுகில் குத்திட்டாங்க ! உங்க கூடவே இருப்பேன் ! சவால் விட்ட ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் !

நேர்மையான வழியை பின்பற்றுபவர்களுக்கு வெற்றியும் பின்னடைவும் சரிசமமே என ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.தற்போதைய

மாப்பிளை கருப்பாக இருப்பதாக கூறி திருமணத்தை நிறுத்திய பெண் | உ.பி-யில் பரபரப்பு

உத்திரபிரதேசத்தில் மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை

Latest News

Big Stories