தெலுங்கானா மாநிலம் சூரியபேட் மாவட்டத்தில் கோடாட் என்ற பகுதியில் 15 வயது சிறுவன் கஞ்சா பயன்படுத்தியதை அடுத்து அவனது தாய் கம்பத்தில் கட்டிவைத்து சிறுவன் முகத்தில் மிளாகாய் பொடியை பூசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தனது 15 வயது மகன் கஞ்சாவுக்கு அடிமையானதை பொறுத்து கொள்ள முடியாத தாய், தனது மகனை பக்கத்தில் இருந்த கம்பத்தில் கட்டிவைத்து இன்னொரு அம்மாவைக் கூப்பிட்டு அவனின் கைகளை பிடிக்க சொல்லி பிறகு அந்த தாய் கையில் கொண்டு வந்த மிளாகாய் பொடியை முகத்தில் முழுவதுமாக தடவி அந்த கடுமையான தண்டனையை தனது மகனுக்கு அளித்துள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்த சிலர் இதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

சிறிது நேரத்தில் அந்த எரிச்சல் தாங்க முடியாமல் கதறி அழுத அந்த சிறுவன் இனிமேல் நான் கஞ்சா இழுக்க மாட்டேன் எந்த விதமான தீய பழக்கத்திற்கு செல்லமாட்டேன் என்று கதறி அழுத பின் அவனது முகத்தில் தண்ணீர் தெளித்து பின்னர் கையில் கட்டியிருந்த கயிறு அவிழ்க்கப்பட்டது. என்னதான் ஒரு கடுமை மிக்க தாயாக இருந்து மகனை கண்டித்து வளர்த்தாலும் இப்படி முகத்தில் மிளகாய் பொடியை பூசுவது பல ஆபத்தான எதிர்வினையை தரும் என்று இணையதளத்தில் இந்த வீடியோவை பார்த்த சிலர் கூறுகின்றனர்.
ஆற்றங்கரையில் திருமண போட்டோஷூட் எடுத்தபோது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாப்பிள்ளை பலி
What happened when a mother found out that her 15-yr-old son was becoming a ganja addict? She came up with a unique treatment. Tie him to a pole & rub mirchi powder in his eyes & not untie him until he promises to quit. Incident in Kodad, #Suryapet dt, #Telangana. pic.twitter.com/Kw8FXaqtz7
— Krishnamurthy (@krishna0302) April 4, 2022