நானே வருவேன் படத்தோட முதல் நாள் வசூல் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் தாணு அவர்கள் இயக்குனர் செல்வராகவனுக்கு மாலை அணிவித்து இதை கொண்டாடினார்.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக யுவன் செல்வராகவன் தனுஷ் இணையும் படம் தான் நானே வருவேன். அதனாலேயே இந்த படத்துக்கு ஒரு நல்ல எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த படம் நேற்று வெளியானது. ஒரு கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் முதல் நாளிலேயே நல்ல வசூலை பெற்றெடுப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

படத்தை பெரும்பாலும் முதல் பாதி நன்றாக இருக்கிறது எனவும் இரண்டாவது பாதி வெறும் சுமாராகத்தான் இருக்கிறது என்றும் கூறுகின்றனர். தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியானது என தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த தகவலின் படி நானே வருவேன் திரைப்படம் முதல் நாளில் பத்து கோடியே 12 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டாடும் விதமாகத்தான் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்று மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
