கோலிவுட் வட்டாரத்தில் புதுமண தம்பதிகளாக வலம் வரும் ஜோடிகள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இந்த ஜோடிக்கு கடந்த வாரம் திருமணம் மாமல்லபுரத்தில் ஆடம்பரமாக நடந்தது. இந்த கல்யாணத்திற்கு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் தங்களது வருகை தந்தனர். இவர்கள் திருமணம் முடித்த கையோடு திருப்பதிக்கு சென்றனர். அங்கு செருப்பு அணிந்து கோயிலுக்குள் வந்ததால் அது ஒருபுறம் பிரச்சனையை உருவாக்கியது.

அதன் பிறகு இவர்கள் கல்யாணம் நடந்த ரிசார்ட்டுக்கு பின்புறம் கடற்கரை அமைந்துள்ளதால் அந்த கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிக்காமல் இருந்த விவகாரத்திலும் சர்ச்சையில் சிக்கியது இந்த தம்பதி. தற்போது கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு விருந்துக்காக சென்றுள்ளனர். அங்கு இரண்டு வாரம் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஜோடி இன்னும் ஒரு சில நாட்களில் சென்னை திரும்ப உள்ளதாகவும் அதன் பிறகு அட்லீ இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாதாகவும் கூறப்படுகிறது. ஷாருக்கான் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி தற்போது தாய்லாந்தில் உள்ள பேங்கிற்கு ஹனிமூன் சென்று உள்ளனர். இவர்கள் தற்போது தாய்லாந்திற்கு சில நாட்கள் அனிமூன் சென்றிருக்கின்றனர். அந்த அனிமூன் முடிந்ததும் உடனே சொந்த ஊருக்குத் திரும்பி சூட்டிங் வேலைகளை முடித்துவிட்டு பிறகு பல நாடுகளை சுற்றிப் பார்க்க திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த அனிமூன் சிறப்பாக முடிந்த பின் இவர்கள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
