அமெரிக்கா டாலருடன், இந்திய ருபாய் வீழ்ச்சி அடைந்ததை நீங்கள் ஏன் கவலை படுகிறீர்கள் ? | சர்ச்சை பேச்சை வெளியிட்ட நிர்மலா

அமெரிக்கா டாலர்க்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பை இழந்ததால் நீங்கள் ஏன் வருத்தப்படுகீர்கள் இந்திய மதிப்பு படி தானே நீங்கள் வீட்டிற்கு மளிகை சாமான் வாங்குவீர்கள் ? என்று பரபரப்பாக பேசியுள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2020 ஆம் ஆண்டில் கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் வீழ்ச்சி அடைந்தது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு பிறகு கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதனால் நாடு மீண்டும் எழுச்சி பாதைக்கு திரும்பியதால், பொருளாதார வீழ்ச்சி சற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு பிறகு பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் பழையபடி வளர்ச்சி அடையத் தொடங்கியது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளும் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து ஒரு மதிப்பீட்டை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

நாம் அன்றாடம் நம்பும் சில மூட நம்பிக்கைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை

தற்போது இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நம்பிக்கை கோரும் வகையில் பேசியுள்ளார். நியூ தேவலப்மன்ட் பங்க் வங்கியின் ஏழாவது வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய அவர் நடப்பு 2022-23 நிதி ஆண்டில் இந்தியா 8.9 சதவீதம் வளர்ச்சி அடையும், மேலும் அடுத்த நிதியாண்டு 2023-24 வருடம் நிதியாண்டில் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் பேசியுள்ளார். மேலும் அமெரிக்கா டாலர்க்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பை இழந்ததால் நீங்கள் ஏன் வருத்தப்படுகீர்கள் இந்திய மதிப்பு படி தானே நீங்கள் வீட்டிற்கு மளிகை சாமான் வாங்குவீர்கள் ? என்று பரபரப்பாக பேசியுள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சில நாட்களுக்கு முன்னால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வறிக்கை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டது. அதில் 2022ஆம் ஆண்டில் இந்தியா 6.4 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த நிதியாண்டில் அதி வேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் இந்தியாதான் முன்னணியில் இருக்கும் எனவும் அந்த சபை கூறியிருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கொரோனா பாதிப்பில் இந்தியா சந்தித்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர இன்னும் 14 ஆண்டுகள் ஆகும் என கூறியுள்ளது.

Spread the love

Related Posts

பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் திடீரென நிலை தடுமாறி கீழே விழும் பரபரப்பான வீடியோ காட்சி

அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர் ஒருவர் தவறி கீழே விழும் வீடியோ

வடஇந்தியாவில் சென்னை அணி விளையாடும் ஐ.பி.எல் போட்டி மாற்றம் காரணம் என்ன ?

மே நான்காம் தேதி லக்னோவில் லக்னோ மற்றும் சென்னை அணிகள் கலந்துகொள்ளும் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து | நடிகர் விஷாலை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற படக்குழு | ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் விஷாலுக்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு

Latest News

Big Stories