கைலாச அதிபர் நித்யானந்தா கடந்த மே மாதம் முதல் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்தார் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் அவ்வப்போது அவரது பேஸ்புக் பக்கம் மூலம் ஏதாவது ஒரு பதிவை போட்டு அவர் நலமுடன் இருப்பதாக கூறப்பட்டது முகம் இன்றி காகிதமும் கைகளையும் காட்டில் பேப்பரில் எழுதியதாக சில பதிவுகளை நித்தியானந்தாவின் முகநூல் பக்கத்தில் அவரது சீடர்கள் பதிவிட்டனர் அனைத்து பதிவுகளிலும் தனது உடல்நிலை சரியில்லை என்பதை மட்டும் நித்யானந்தா உறுதிப்படுத்திருந்தார் உறக்கம் இல்லை என்கிற பிரச்சனையையும் அவர் தெரிவித்திருந்தார் 27 மருத்துவர்கள் கொண்ட குழு தன்னை கண்காணித்து வருவதாகவும் விரைவில் குணமடைவேன் என்றும் அதுவரை சமாதியில் இருப்பேன் என்றும் நித்யானந்தா தெரிவித்து வந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு கைலாச அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நித்யானந்தாவின் உற்சவர் சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கும் போட்டோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன உயிரோடு இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் நடைமுறை இதுவரையில் இல்லை அவர்கள் இறந்த பின்பு வழி நடத்துவது நடைமுறையிலுள்ளது என்னதான் நித்யானந்தா தன்னை தெய்வ அவதாரமாக கூறிக்கொண்டாலும் அவரும் ஒரு இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார் அது சிவன் , பெருமாள் போன்ற தெய்வங்களை கொண்ட சாமி வழிபாடு ஆகும்

அப்படி இருக்கும்போது திடீரென நித்யானந்தா சிலைகளை பிரதிஷ்டை செய்து அதற்கு நித்யானந்தா இந்து கோயில் என்று பெயர் வைத்துள்ளனர் சமாதியில் இருப்பதாக கூறி வந்த நித்தியானந்தா ஜீவசமாதி அடைந்த பின் இந்த கோயில் வைக்கப்பட்டதா என்கிற சந்தேகமும் எழுகிறது கடந்த சில நாட்களாகவே நித்யானந்தா தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை அவரது உடல் நிலை தொடர்பான அறிக்கைகளிலும் தகவல் இடம்பெறவில்லை அந்நிலையில் திடீரென நித்யானந்தாவிற்கு கோயில் கட்டி அதற்கு பூஜைகள் செய்ய தொடங்கி இருப்பதை பார்க்கும் போது உண்மையிலேயே நித்தியானந்தாவிற்கு ஏதோ நடந்திருக்கக் கூடும் என்றே தெரிகிறது நித்யானந்தா இல்லை என்றால் தற்போது கைலாசம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது யார் உத்தரவின் பேரில் கைலாச இயங்குகிறது என்ற பல்வேறு கேள்விகள் இதன் மூலம் மக்கள் கேள்விகேட்டுவருகிறார்கள் நித்யானந்தாவின் இழப்பை முறையாக அறிவித்தால் அவர்களின் பக்தர்கள் கவலைப்படுவார்கள் என்பதால் இதுபோன்ற சமூகவலைத்தளங்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர் எது எப்படி இருந்தாலும் இன்னும் கூட கைலாசத்தில் இருந்து உறுதியான எந்த தகவலும் வெளிவரவில்லை என்பதே மக்களுக்கு வேதனையளிக்கிறது



