ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பை வழங்கியுள்ளது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்களின் கருணை மனு அப்போதிலிருந்தே நிலுவையில் உள்ளது. கருணை மனுவை இந்த மாதிரி நிலுவையில் வைத்திருப்பது அநீதியான ஒரு செயலாகும். அதனால் 2016இல் பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார். அதன்பின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்திருந்தார்.

“திமுகவும், பெரிய வெங்காயமும் ஒன்று உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது…” | கடுமையாக விமர்சித்த அண்ணாமலை

தற்போது நீதிபதிகளின் அமர்வுக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதிகள் கூறியதாவது :- “பேரறிவாளன் ஏற்கனவே சிறையில் முப்பது வருடம் இருந்துவிட்டார். அவர் அங்கேயே படித்தும் விட்டார். உங்களின் தயவு இல்லாமல் நாங்களே ஏன் அவரை விடுதலை செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் மத்திய அரசையும், மாநில அரசையும் கேட்டது. இதனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், போபண்ணா ஆகியோர் தலைமையில் இன்று தீர்ப்பு வழங்கி பேரறிவாளனை விடுதலை செய்வதாக அறிவித்தனர்.

உச்சநீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 142 ஆவது பிரிவு செயல்படுத்தி பேரறிவாளனுக்கு விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்பு வழங்குவது மிகவும் அரிதான ஒரு விஷயமாகும்.

Spread the love

Related Posts

தனது 100வது டெஸ்டில் ஊனமுற்றோர் ஒருவருக்கு அவரது டீ-சர்ட்டை பரிசாக அளித்து நெகிழ வைத்துள்ளார் கோலி

காலில்லாத ஊனமுற்றோர் ஒருவருக்கு விராட் கோலி அவரது டீ-சர்ட்டை அந்த ஊனமுற்றோர்ருக்கு பரிசாக அளித்து நெகிழ

ரூபாய் 190 கோடிக்கு பங்களா வாங்கிய பிரபல தமிழ் நடிகை ! இவரா எப்படி ! ஆச்சரியத்தில் திரையுலகம் !

பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ஊர்வசி ரவுத்தேலா மும்பை மையப்பகுதியில் வாங்கி இருக்கும் புதிய பங்களா

மாணவனை அடித்ததாக கூறி ஆசிரியர்களை ஓட ஓட விரட்டி சென்று தாக்கிய பெற்றோர்களின் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரல்

கோவில்பட்டி அருகே ஆசிரியர் மாணவரை அடித்ததால் மாணவரின் உறவினர்கள் சேர்ந்து ஆசிரியர்களை ஓட ஓட விரட்டி

Latest News

Big Stories