இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது 72 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பாஜக சார்பிலும் மற்றும் மற்ற அரசியல் கட்சி தலைவர்களின் சார்பிலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரதமர் மோடிக்கு பரிசாக வந்த பொருட்களை ஏலம் விடும் பணிகள் இன்று தொடங்குகின்றது. தற்போது நம்முடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்து செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல்நிலையுடனும் வாழ வேண்டும் என கூறி தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு இருந்தார் ஸ்டாலின் அவர்கள்.

மேலும் இன்று பெரியாரின் பிறந்த நாளும் கூட அதற்கும் தன்னுடைய வாழ்த்துக்களை கூறினார் ஸ்டாலின், பிறப்பால் பேதம் கற்பித்து, தீண்டாமை நிலவிய சமூகத்தில், புரட்டுகளுக்குள் புதைந்துகிடந்த அழுக்குகளை அம்பலப்படுத்தி, இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களும் சுயமரியாதையோடு வாழ்ந்திடும் வரலாற்றைப் படைத்த புரட்சியாளர் தந்தை பெரியார் வழிநடப்போம்! தமிழர் இனமானம் காப்போம்!” என கூறியுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் ஆன ஒரு சமூக நீதி தலைமையாக தான் பெரியார் திடல். பெரியார் எனது தாய் வீடு எங்கு எப்போது வந்தாலும் புத்துணர்ச்சி பெறுகிறேன். பெரியாரின் சிந்தனைகள் எல்லாவற்றையும் மொழி பெயர்த்து, உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிட இருக்கிறோம் என பெரியாரின் பிறந்த நாள் அன்று இப்படியாக கூறி பெரியாருக்கு வாழ்த்து கூறியிருக்கிறார் ஸ்டாலின்.
