பாரதிராஜா பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதற்காக ராதிகா பிரார்த்தனை செய்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார் அவர்.
இது குறித்து பேசியிருக்கும் ராதிகா அவர்கள் :- “என் இனிய இயக்குனர் பாரதிராஜா அவர்களே, என்னுடைய பிரார்த்தனை உங்களுக்கு எப்போதுமே இருக்கும். நீங்கள் விரைவில் குணமடைவீர்கள். உங்களுக்காக நான் பிரான்சில் இருக்கும் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தேன். உங்களை நான் நாடு திரும்பியதும் விரைவில் வந்து சந்திக்கிறேன். உங்களிடம் பேசுவதை நான் தவற விடுகிறேன்” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார் ராதிகா.

இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஏற்கனவே நீர்ச்சத்து குறைபாடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்திருக்கிறது. இதனால் அவருக்கு கடந்த இரண்டு நாட்கள் வீட்டில் வைத்தே மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அது தீவிரமடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு வருவது சிறந்தது என மருத்துவர்கள் கூற சென்னை டிநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு இவரை கொண்டு சென்றுள்ளனர்.


அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு நீர்ச்சத்து குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்தனர். இதனால் புதிய ஒரு மருத்துவ குழுவை கொண்டு அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன, இதனால் பெரிதாக எதுவும் ஆபத்து இல்லை எனவும் நான்கு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவ குழு கூறியிருக்கிறது.
En iniya director @offBharathiraja avargaley, my special prayer to you to get well soon at the Lourdes church ,in France. waiting to see you soon on my return, miss talking to you 🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/Pg9LsFCh5F
— Radikaa Sarathkumar (@realradikaa) August 25, 2022