தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு அந்தமான் பகுதியில் வருகிற 28 ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிழக்கில் காற்று வேகமாக மாறுபடுவதால் தமிழ்நாட்டில் பெரிய மழை உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி கோவை, திருப்பூரு, திண்டுக்கல், நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தொடங்கியது முதலில் வெயில் முழுவதுமாக வாட்டி வதைக்கிறது. இந்த சூழலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக்கிய நிலையில் சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் மற்றும் ஆங்காங்கே மழை பெய்வதற்கு வாய்ப்பு உண்டு.