குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கி மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் பழைய கோமாலியான புகழ் இல்லையே என்று பல ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர் தற்போது அவரும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த சமயத்தில் சென்ற சீசனில் ரக்ஷன் மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையே நடந்த குட்டி செல்லமான சண்டைக்கு ஒரு வருடம் கழித்து இப்போது ரக்ஷன் பழி வாங்கி இருக்கிறார்.
அதாவது சந்தோஷ் தயார் செய்த உணவிற்கு யாரையாவது டேஸ்ட் பண்ணி பாக்க சொல்ல வேண்டும் என்பதற்காக யாரையாவது கூப்பிடலாம் என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் ரக்ஷன் அங்கே வந்து அந்த உணவில் உப்பை கொட்டிவிட்டு இதை மணிமேகலைக்கு கொடுத்து விடலாம் என்று எண்ணுகிறார்.


ஆனால் மணிமேகலை நேரடியாக கூப்பிட்டால் வர மாட்டார்கள் என்பதற்காக மூக்குத்தி முருகனை கூப்பிடுமாறு கூப்பிட்டபோது மணிமேகலை தானாகவே முன்வந்து அதை சுவைத்து பார்த்து மாட்டிக்கொண்டார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒரு வருடம் கழித்து ரக்ஷன் அவர்கள் மணிமேகலையை பழிவாங்கி விட்டார் என்று மணிமேகலையைக் டேக் செய்து கலாய்த்து வந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது மணிமேகலை அதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு.

இதற்கான விளைவுகளை நீ கண்டிப்பா சந்திப்ப ரக்ஷன் அப்படின்னு ரக்ஷன் அவர்களை டேக் செய்து கொஞ்சம் கோபமான எமோஜி களை போட்டு பதிவிட்டார் மணிமேகலை. ஒரு வருஷம் முன்னாடி நடந்த விஷயத்திற்காக தற்போது பதிவாகியுள்ள ரக்ஷனை வரும் எபிசோடுகளில் மணிமேகலை எப்படி பழிவாங்க போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
