கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் 94 ஆயிரத்து 985 ரூபாய் என குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்குத்திபுறம் தோட்டீ கிராமத்தை சேர்ந்தவர் தான் ரேவண்ணா. இவர் மனைவி காலி மற்றும் தனது குழந்தைகளுடன் கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் தான் வசித்து வருகிறார். சமீப காலமாக வீட்டில் இரண்டு மாதத்திற்கு 100 யூனிட் வரை மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்தி வந்த ரேவண்ணாவிற்கு தற்போது மின் கட்டணம் 94 ஆயிரத்து 985 ரூபாய் செலுத்துமாறு குறுஞ்செய்தி மூலம் வந்துள்ளது.

100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் இதுவரை ரேவண்ணா மின்கட்டணம் செலுத்தியது இல்லை. தற்போது இந்த செய்தியை பார்த்து அதிர்ச்சியை அடைந்த ரேவண்ணா உடனடியாக தாளவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டார். இது குறித்து சத்தியமங்கலம் கோட்டா மின்செயர் பொறியாளர் குலசேகர பாண்டியன் விசாரணை மேற்கொண்டு இந்த புகார் குறித்து மின்னிணைப்பு மீட்டரை ஆய்வு செய்தனர். அதில் மின்வாரிய அதிகாரிகள் மின்சாரம் மீட்டர் கணக்கெடுப்பில் கூடுதலாக பதிவாவதாகவும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை எடுத்து தற்போது ரேவண்ணா நிம்மதி அடைந்துள்ளார்.
