அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பின்பு அதிமுக கட்சி பல விதமான பிளவு பட்டுள்ளதும். ஒரு பக்கத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் என தனித்தனியாக பிரிந்து இருக்கின்றனர். மறுபுறம் சசிகலா அதிமுக எனக்கு தான் சொந்தம் என கூறிக் கொண்டு வருகிறார்.
சசிகலா மேலும் சேலம், ஈரோடு பகுதியில் தொண்டர்களை சந்தித்து திமுக அரசை விமர்சித்து வருகிறார். 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெரும் என கூறினார் சசிகலா. திமுக தேர்தல் அறிக்கை எதையும் நிறைவேற்றவில்லை 505 வாக்குறுதிகளை திமுக வாக்குறுதி புத்தகத்தில் இருக்கிறது. மிகப்பெரிய புத்தகமாகவும் அதை வெளியிட்டது. ஆனால் அது மக்களை ஏமாற்றும் வேலை தான்.

மேலும் மின்சார கட்டணத்தை உயர்த்தி ஏழை மக்கள் மீது திமுக அரசு இரக்கம் காட்டவே இல்லை. இதேபோல் சிறு குறு தொழிலார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு திமுக அரசு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கிருந்த மக்களை சந்தித்து வருகிறேன். அப்போது மக்களும் என்னை பார்க்கிறார்கள். நானும் அவர்களை பார்க்கிறேன். அவர்கள் என்னை பார்த்து அன்பா பழகுற விதமும் ஒன்று மட்டும் அதிலிருந்து எனக்கு புரிகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை நம்பியது போல இவர்கள் என்னை நம்புகிறார்கள்.
அந்த நம்பிக்கையை நான் அவர்களிடம் பார்த்தேன். கண்டிப்பாக மக்களுக்காக நான் நல்லது செய்ய அதிமுகவில் இணைந்து பணியாற்றுவேன். அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசிய அவர் நான் ஓபிஎஸ்ஐ மட்டும் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை எல்லோரையும் சேர்த்துக் கொள்ளப் போகிறேன் நீங்கள் ஏன் எங்கள் கட்சியை பிரித்து பிரித்து பார்க்கிறீர்கள் ? அதிமுகவில் இருக்கும் ஒவ்வொரு நபர்களும் எனக்கு முக்கியம். அதிமுகவில் என்ன நடக்கப் போகிறது என்று நீங்கள் புரிந்து இருந்து பாருங்கள் என கூறியிருக்கிறார்.
