சாதி கயிறு கட்டுவதில் ஏற்பட்ட மோதல் காரணாமாக 12 ஆம் வகுப்பு மாணவன் மரணம் | நெல்லையை உலுக்கிய சம்பவம்

நெல்லையில் மாணவர்களிடையே ஏற்பட்ட சாதி மோதலால் ஒரு மாணவன் பலியாகியுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 25ஆம் தேதி மாணவர்களிடையே கலர் கலராக கட்டும் சாதி கயிறுகளில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் சக மாணவர்கள் 12-ம் வகுப்பு படிக்கும் செல்வ சூரியன் என்ற மாணவனை தாக்கியுள்ளனர்.

ஹிந்தி தேசிய மொழி என வாதம் நிலவும் நிலையில், உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் என பேசியுள்ளார் மோடி

அந்தத் தாக்குதலில் காயமடைந்த மாணவன் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை அந்த மாணவன் இறந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அதே பள்ளியில் பயிலும் மாணவர்கள் 3 பேர் மீது பாப்பாக்குடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இறந்த அந்த மாணவன் மீது பெல்ட் மற்றும் கற்களால் தாக்கியது தெரியவந்துள்ளது பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல் ஏற்பட்டது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Related Posts

அடேங்கப்பா… நேற்று இரவு முதலே டிக்கெட் வாங்க அலைமோதிய ரசிகர் கூட்டம் | கலைகட்டும் சென்னை சேப்பாக்க மைதானம் | வீடியோ உள்ளே

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற உள்ள ஒரு நாள் போட்டி டிக்கெட் வாங்க அதிகாலை முதல்

புது பட ரிவியூ | ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் அகிலன் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் இவங்க எல்லாம் நடிச்சு

இந்த ராசி காரர்களுக்கு கண்களில் பிரச்னை ஏற்படும், அதை எப்படி போக்குவது தெரியுமா ?

ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் வீடு, 12ம் வீடு ஆகிய வீடுகளை வைத்து கண்களில் கோளாறு னாய்

Latest News

Big Stories