இரவு நேரங்களில் ஸ்மார்ட் போனை தலைக்கு கீழும் படுக்கையிலையும் அப்படியே வைத்துவிட்டு தூங்குவதால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படுகிறது என்பது பலருக்கு இங்கு தெரியாது.
ஸ்மார்ட்போன் இல்லை என்றால் நமக்கு ஒரு கை இல்லாதது போல இருக்கிறது. இந்த உலகில் உள்ள பெரும்பாலானோருக்கு மூன்றாவது கையாக எந்த ஸ்மார்ட் போன் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட் போன் மோகம் உலக அளவிலும் அனைவரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருக்கிறது. இந்த ஸ்மா ர்ட் போன்களில் கேம் விளையாடிவிட்டு இரவு நேரங்களில் போனை பக்கத்திலேயே வைத்து தூங்கி விடுகின்றனர். போனை உபயோகிப்பதனால் அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கமானது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் அதை குறிப்பாக தூங்கும்போது தலையணைக்கு கீழும் படுக்கைக்கு பக்கத்திலும் வைத்துக்கொண்டு படுத்தால் உங்கள் மூளையின் செல்லுலார் அளவை அது பாதிக்கும்.

தற்போது மொபைல் போன் அதிக சூடு காரணமாக வெடித்து சிதறும் பல செய்திகளை கேள்விப்பட்டு வருகிறோம். பல பேர் ஸ்மார்ட்போனை சார்ஜ் போட்டுவிட்டு முழு சார்ஜ் ஆனபின்னும் கூட எடுக்காமல் காலை எழுந்தவுடன் தான் சார்ஜில் இருந்து எடுக்கிறார்கள். இவ்வாறு செய்வது ஆபத்தானது ஆனால் தற்போது தயாரிக்கப்படும் மொபைல் போன்களில் இந்த மாதிரி ஆபத்துகளை கருத்தில் கொண்டு தயாரிக்கின்றனர். ஆனால் இதுவே ஒரு 2 அல்லது 3 வருட பழைய போன் என்றால் இந்த பிரச்சனை கண்டிப்பாக இருக்கும்.
அதே நேரம் தலையணைக்கு பக்கத்தில் செல்போனை வைக்கும் போது அது அதிகம் சூடாகும், மேலும் ஸ்மார்ட்போன் மீது அதிகம் அழுத்தம் ஏற்படுகிறது அதிகம் அழுத்தம் காரணமாக வெடிக்கும் அபாயமும் இருக்கிறது. அதனால் இதுபோன்று செயலை அறவே தடுப்பது நல்லது.
