விருமன் திரைப்பட விழாவில் கோவில் கட்டுவதை விட, அன்ன சாலை கட்டுவதை விட கல்விச்சாலைகளை பெருக்குவது நல்லது என சூரி பேசியிருந்தார், தற்போது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பயில்வான் ரங்கநாதன் அவர்களும் ஒரு வீடியோ போட்டிருந்தார்.
மேலும் சில இந்து அமைப்பினர்கள் விருமன் பட விழாவில் சூரி பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்கும் படி கூறி வருகின்றனர். இதனால் தற்போது விரும்ன் படத்துடைய சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூரி அவர்கள் :- “நான் மதுரையில் பேசிய கோவில் விவகாரத்தை தப்பாக புரிந்து கொண்டனர். நான் ஒருபோதும் கோவில்களுக்கு எதிரானவன் அல்ல, எனக்கும் மீனாட்சி அம்மனை புடிக்கும். என்னுடைய ஓட்டல்களுக்கும் நான் அம்மன் என்று தான் பெயர் வைத்துள்ளேன்.

அதனால் நான் ஒருபோதும் கோவில்களுக்கு எதிராக பேசுபவன் அல்ல நான் அடிக்கடி மீனாட்சி அம்மன் என்ற வார்த்தையை பயன்படுத்துவேன். நான் ஒரு படிக்காதவன் அதனால் எனக்கு படிப்புடைய அருமை தெரியும் அதனால் தான் நான் அன்று அதை கூறினேன் தவிர அதில் வேறு எந்தவித உள்நோக்கமும் இல்லை என தற்போது தெளிவுபடுத்தி உள்ளார்.
